குருஷேத்திர போர் என்பது மேலோட்டமாக காண்போருக்கு ஒரு யுத்தம்.
அதன் உள்ளர்த்தத்தை ஆராய்ந்து நோக்கிடில் அது ஜீவத்மாவிடமுள்ள
தீமைகளை களைய பரமாத்மா கொண்ட ருத்ர அவதாரம், நல்ல சக்திக்கும் தீய சக்திக்கும் நடந்த ஆத்ம யுத்தம் என்று கீதைக்கு விளக்கம் கூறும் ஆன்மீக நூல்கள் பகர்கின்றன.
ஆம். இன்றும் ஒரு குருக்ஷேத்திர போர் நடந்து கொண்டிருக்கிறது.
அன்னா ஹசாரே காந்தீய வழியில் துவங்கிய அமைதிப்போர் நாடெங்கும்
உணர்ச்சி பிழம்புகளை பரப்பி அதன் அழல் கொழுந்து விட்டு எறிந்து கொண்டிருக்கறது. தர்மம் வெல்ல நாமனைவரும் இணைந்து பிரார்த்திப்போம். பாரதம் என்றும் புண்ணிய பூமியாகவே விளங்க நமது
மனங்களை ஒருமைப்படுத்தி உள்ளார்ந்த உணர்வுகளை பதிப்போம்.